இரவின் அமைதியில் மௌனங்கள் பேசும்
இதயம் மலரும் இதழ்கள் சிரிக்கும்
உறவின் தொடக்கம் உணர்வுகள் கலக்கும்
பிறக்கும் காதலில் பிணையும் கைகளும்
உறக்கம் துறக்கும் கிறக்கம் தொடங்கும்
இருளில் கண்கள் வெளிச்சம் தேடும்
மருளும் மான்போல் மங்கையின் மனமும்
இன்பம் தேடும் இரண்டு உள்ளமும்
துன்பம் யாவும் விலகிடும் நேரம்
மனித வாழ்க்கை மயக்கம் தேடும்
இனிதே இரவும் விடியலைத் தேடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக