புதன், 3 ஜூன், 2020

யாருக்கு இந்நாடு

சாலையிலும் இரயில் பாதையிலும் நடப்பதைக் காணவே
சாகும் வரை நடத்துவோம் சத்திய சோதனை
யாருக்கு இந்நாடு யாரறிவார் சோற்றிற்கும் வழியில்லை
யாசகம் ஒன்றேதான் வழியோ சூசகமாய்ச் சொன்னீரோ
தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோமா சொல்வீரே
தலைவரெலாம் நல்லவராய் மாறுதற்கு வழியேதும் உண்டோ
உயரப் பறக்காமல் தரைமீது தத்தளிக்கும் உயிர்பாரீர்
உழைப்பவர் இல்லாமல் உயர்ந்திடுமோ இந்நாடு இயம்பிடுவீர்
இல்லாமை இல்லாத நிலைவேண்டும் என்றானே கவிஞன்
இப்போது இல்லாமல் எப்போது நடக்குமது தெரியலியே
கோடிகள் கேடிகளிடம் கேட்பதற்கும் இயலாத நிலையிங்கே
கோமாளிகளாய் மாறிநின்ற மக்களுக்கு தினமொரு நாடகக்காட்சி

கருத்துகள் இல்லை: