ஆறடி நிலமே சொந்தமென்றே உணர்ந்தும்
ஆலாய்ப் பறக்கும் மனித மனம்
ஆசைகள் அடக்க முனிவராக வேண்டுமா
ஆயிரம் கதைகள் நல்வழி போக
ஆயினும் தொடர்வதோ கரடு முரடே
விட்டில் பூச்சிகள் தெரிந்தே தீயினில்
விடுகதை வாழ்க்கை விடையே இல்லை
பட்டே அறிவர் பாவியர் இவர்
சுட்ட பின்பே நெருப்பெனத் தெளிவர்
நல்ல நிலங்கள் வறண்டு கிடக்க
புல்லும் பூண்டும் உயர வளரும்
வேதனை மனதில் வேள்வித் தீயாய்
சோதனைக் காலம் முடிவது எப்போது ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக