சனி, 6 ஜூன், 2020

நீரோட்டம்

ஆறு தனது பாதையில் அமைதியாகப் போகிறது. திடீரென பெரும் பள்ளமொன்று ஆற்று நீர் இப்போது அருவியாய் இரைச்சலோடு கீழே விழுகிறது.
கடல் நீர் கரையைத் தொடும்போது அலைகளாய் ஆர்ப்பரிக்கிறது.
என்றும் நிலையாக இருக்கும் கிணறு, குளம், ஏரி அமைதியாய். கல்லெறிந்தாலோ அதனுள் குதித்தாலோ அலைகளோடு சிறிய சத்தம் எழுகின்றது.
மழை நீரோ தான் பெய்யும் இடம் சார்ந்து நிறங்களைக் கொள்கிறது. அதுவே அளவுக்கு அதிகமாயின் வெள்ளப்பெருக்கும் பேரழிவும்.
குளிர்ப்பிரதேசங்களில் அதே நீர் உறைந்து வெண்பனியாய்.
கதிரவனின் வெப்பத்தில் ஆவியாகி மேகங்களாய் பவனி வந்து மழையாய் பூமியில் மீண்டும்.
இவையனைத்தும் நீரின் பரிமாணங்கள். வாழ்க்கையும் இப்படித்தானே.
இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கைப் பாதை நமக்கு கற்றுக் கொடுப்பவை ஏராளம்.
கரடு முரடான பாதைகள், உயர்ந்தும் தாழ்ந்தும், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறாய், பருவ மாற்றங்கள், அமைதியாய் சில நேரம், விரைவாய் சில நேரம், கொந்தளிப்பாய் சில நேரம், சுழன்றும் உழன்றும் தொடர்கிறது

கருத்துகள் இல்லை: