புதன், 3 ஜூன், 2020

உறங்காத இரவு

இரு மனதும் உறங்காத இரவுகளில்
ஒரு மனதாய் இணைந்து பாடியவளே
தூரம் என்றும் துச்சமே நினைவில்கொள்
பாரம் மனதில் ஏன் பெண்ணேயுனக்கு
நானிருக்கும் திசைக்காற்றை உன்னிடம் சேர்ப்பேன்
தேனிருக்கும் உன்குரலை நீயனுப்பி வைப்பாயா
உறக்கம் வராத இரவுகளில் உன்குரல்
உள்ளத்தில் நுழைந்து தாலாட்டுப் பாடட்டும்
கண்மூடி முகம் பார்த்து கற்பனையில்
கரம்  கோர்த்து காலமெல்லாம் நானிருப்பேன்

கருத்துகள் இல்லை: