புதன், 3 ஜூன், 2020

வாழிய தாய்த்திருநாடு

வாழிய‌ நற்றமிழ் வாழிய தாய்த்திருநாடு
வளமுடன் என்றும் வாழ்கவே மக்கள்
சீரிய சிந்தனை சிறப்புற வாழ்வினை
காரிய தூய்மையை கொண்டே நடத்திடு
வறியவர் செல்வர் பேதமை அற்று
நன்மையே மனதினில் நாளும் இருத்தி
கொடிய செயல்கள் செய்வது தவிர்த்து
உழவும் தொழிலும் உயரச் செய்து
நானிலம் போற்றிட நற்செயல் செய்து
நல்லதோர் உலகை நாளைய சமுதாயம்
பெறுக பெருமை கொள்க சான்றோரே
விழைவது என்செயல் விடைகள் உம்மிடம்
செய்வீரா செவ்வனே செப்பிடுவீர் உறவினரே !

கருத்துகள் இல்லை: