புதன், 3 ஜூன், 2020

அன்னை

அன்னையென்ற சொல்லுக்கு ஈடில்லை உலகில்
அன்பென்ற உருவே அவளாய் என்றும்
சுமையென்று பாராத மனித தெய்வம்
சுமந்தாளே வயிற்றில் பத்து மாதம்
இரவென்றும் பகலென்றும் இல்லாத வாழ்வில்
இறைவியாய் இருந்தென்றும் காத்து நிற்பாள்
சொல்லொன்று போதாது அவள் புகழ்பாட
கல்லும் கரையும் தாயவள் குரலில்
பிறவி மற்றொன்று உண்டென்றால் இறைவா
பிறந்து தாய் மடியில் உறங்க வேண்டும்

கருத்துகள் இல்லை: