அமைதி தேடி பயணம் தொடரும்
அலையும் மனதில் ஆயிரம் சிந்தனை
கடலின் அலைகள் ஓய்வது எப்போது
கவலைகள் மனதில் ஓய்ந்திடும் அப்போது
ஓடிய கால்கள் நிற்பதும் இல்லை
நாடியே ஓடிடும் நான்கையும் தேடி
பிரிவுகள் மனதில் பிறந்தவை அதனால்
பரிவும் பாசமும் வற்றிப் போனது
ஆறறிவு படைத்த மனிதன் மனது
ஐந்தறிவு படைத்த மிருகத்தினும் கீழாய்
அறுபதோ நூறோ ஆயுளே முடியும்
அதற்குள் எத்தனை ஆட்டம் உன்னிடம்
புரிதல் வேண்டும் மானிடம் ஒன்றே
எரிதழல் எலும்பையும் எரித்துச் சாம்பலாக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக