புதன், 3 ஜூன், 2020

அமைதி தேடி

அமைதி தேடி பயணம் தொடரும்
அலையும் மனதில் ஆயிரம் சிந்தனை
கடலின் அலைகள் ஓய்வது எப்போது
கவலைகள் மனதில் ஓய்ந்திடும் அப்போது
ஓடிய கால்கள் நிற்பதும் இல்லை
நாடியே ஓடிடும் நான்கையும் தேடி
பிரிவுகள் மனதில் பிறந்தவை அதனால்
பரிவும் பாசமும் வற்றிப் போனது
ஆறறிவு படைத்த மனிதன் மனது
ஐந்தறிவு படைத்த மிருகத்தினும் கீழாய்
அறுபதோ நூறோ ஆயுளே முடியும்
அதற்குள் எத்தனை ஆட்டம் உன்னிடம்
புரிதல் வேண்டும் மானிடம் ஒன்றே
எரிதழல் எலும்பையும் எரித்துச் சாம்பலாக்கும்

கருத்துகள் இல்லை: