சனி, 6 ஜூன், 2020

பெருமனம் கொள்வீர்

உயிர்வாழ்தல் யாருடைய கையில் தெரியுமா
உயிர்மூச்சு எதுவரை எவரே அறிவர்
இக்கணம் மட்டுமே உனக்குச் சொந்தம்
எக்கணம் என்ன நடக்கும் அறியோம்
ஆயினும் எதிர்காலம் நமதென்று எண்ணுவோம்
ஆயிரம் கொள்கைகள் பேசியே அலைவோம்
எதிலும் வேற்றுமை உயர்வு தாழ்வு
எத்தனை பிரிவு எண்ணற்ற சாதிகள்
எதனால் மனதில் இந்தக் குழப்பம்
எதையும் அலசிப் பார்ப்பது அவசியம்
பிறப்பதும் இறப்பதும் நம்மிடம் இல்லை
பிறகேன் மனதினில் இத்தனை வன்மம்
வானமே எல்லைபோல் வார்த்தைப் போர்கள்
வாதங்கள் எங்கோ தொடங்கி முடிவதெங்கோ
பேதங்கள் நீக்கி பெருமனம் கொள்வீர்
பேரமைதி நிலவும் பெருமகிழ்வும் நிறையும் !

கருத்துகள் இல்லை: