சனி, 6 ஜூன், 2020

ஏனிந்த வேற்றுமை

கவி பாட எவை வேண்டும் இறைவா
புவி வாழ யார் உதவி செய்வார்
இசையோடு தாளங்கள் சேர
இனிதான பாடலும் வருமா
அலையோசை நாதமாய் மாறுமா
கலைவாணி கவிதையைத் தருவளோ
எனையாளும் இறையே எங்கே
புனைகின்ற பாடலில் புகுந்திடு
பண்பாடும் பக்தியும் முறையோ
கண்மூடி உனைநாடல் சரியோ
வேதங்கள் செய்தவர் எவரோ
பேதங்கள் போக்குதல் தவறோ
ஏனிந்த வேற்றுமை எதிலும்
மானிடர் இனமே ஒன்றே
காலங்கள் மாற்றிடும் இதனை
ஓலங்கள் ஓய்ந்திடும் அந்நாளில் !

கருத்துகள் இல்லை: