புதன், 3 ஜூன், 2020

உயர்ந்தவன் நீயில்லை மானிடா

பூமித் தாயே உனது உடலைச் சிதைத்தோம்
அமிலக் காற்றால் உன் சுவாசம் குறைத்தோம்
காடுகள் அழித்து உயிர் மூச்சை இறுக்கினோம்
வேடுவர் போல வேட்டையாடினோம் இயற்கை வளத்தை
மேனியெங்கும் ரணப் படுத்தி அழகைக் குலைத்தோம்
மேதாவி நாங்கள் என்று மார்தட்டிக் கொக்கரித்தோம்
பொறுத்த நீயோ பொங்கி எழுந்தாய் சினங்கொணடு
சிறிய கிருமியொன்றே சிதைக்கும் வாழ்வென்று புரியவைத்தாய்
என்னிலும் உயர்ந்தவன் நீயில்லை மானிடா உணரவைத்தாய்
என்றுவரை தொடருமென்று அறியாது தவிக்க விட்டாய்
உணர்ந்தோம் அன்னையே உனது சக்தியை இன்று
உய்விக்க வழியொன்று சொல்வாயா மானிடம் வாழ்ந்திருக்க!

கருத்துகள் இல்லை: