புதன், 3 ஜூன், 2020

எங்கும் கடவுள்

ஆங்கோர் ஏழை பசி போக்கின் கடவுள்
தூங்கா விழியோடு எல்லை காப்பான் கடவுள்
தன்னுயிர் நோக்கா பிறருயிர் காப்பவன் கடவுள்
இன்னுயிர் இரக்கம் படைத்தவன் வறியவானியினும் கடவுள்
ஏரைப் பூட்டி நிலமதை உழுபவன் கடவுள்
ஏளனம் பேசாத கருணை உள்ளமும் கடவுள்
தெருவெங்கும் தூய்மைப் படுத்தும் எவரும் கடவுள்
ஊரக தெருக்களை காத்திடும் காவலர் கடவுள்
மக்கள் நலனே உயர்ந்தது என்பவன் கடவுள்
மனதில் நேர்மை கொண்டவர் யாவரும் கடவுள்
உன்னிலும் என்னிலும் பிறரிலும் எங்கும் கடவுள்
உணர்ந்தவர் உயரியர் உண்மையும் அதுவே நினைவில்கொள் !

கருத்துகள் இல்லை: