சனி, 6 ஜூன், 2020

விந்தை மனிதன்

உலகில் மனிதர்கள் அதிசயப் பிறவிகள்
பலவும் கற்றும் பண்பினை மறப்பர்
ஏளனம் செய்தே நாட்களை ஓட்டுவர்
ஏனிந்த விளையாட்டு அவரே அறியார்
குரங்காய் சிலகாலம் மரங்களில் தாவுவர்
குயிலாய் எண்ணி குரல்வளம் தேடுவர்
புலியாய் உறுமி புல்லைத் தின்பர்
எலியாய் வலையில் ஒளிந்து பார்ப்பர்
பாம்பின் நஞ்சும் பேச்சினில் கொள்வர்
பாம்பாட்டி மகுடிக்கு மயங்கி ஆடுவர்
பச்சோந்தி சிலரோ வண்ணம் மாறுவர்
பசுங்கிளி சிலரும் சொல்வதைச் செய்வர்
சிங்கமும் சிலநேரம் சிந்தனை வயப்படும்
சிறுநரி வார்த்தையில் தந்திரம் தெரியும்
விந்தைகள் நிறைந்தவன் மனிதன் மட்டுமே
மந்தையில் ஆடுகள் மேய்வது போலவே !

கருத்துகள் இல்லை: