புதன், 3 ஜூன், 2020

மனித மிருகங்கள்

மனிதம் செத்து விட்டது சொல்லவைத்தீரே
மானிடப் பதரே தவறிப் பிறந்தீரோ
தன்னுயிர் ஈந்த மருத்துவன் இறைவன்
தன்னலம் பாராமல் இரவும் பகலுமாய்
எத்தனை உயிர்களைக் காத்து இருப்பான்
எவராயினும் பிணமே நீவிர் சாவதேமேல்
கரோனா உங்களைத் தழுவி நலிவுற்று
கடைசியில் அனாதைப் பிணங்களாய் ஆவீர்
நீவிர் இந்த மண்ணின் மைந்தரல்ல
நீச்சர்களே ஒழிந்து போய் விடுங்கள்
இந்த மண்ணுக்குக் களங்கம் உம்மால்
மனித மிருகங்களே மன்னிப்பே இல்லை

கருத்துகள் இல்லை: