திங்கள், 25 பிப்ரவரி, 2019

இறைவன் காலடி

உலகளந்தவனும் உமைப் பாகனும்
உலகமே தந்தையும் தாயுமாய் ஒருவனும்
மயிலேறி அண்டம் சுற்றியவனும்
மலை தூக்கி மக்களைக் காத்தவனும்
தீயவை களைய வேலேந்தியவனும்
நல்லோர் பக்கம் நின்று பழியேற்றவனும்
சிலையாய் அருவமாய் உருவமாய் நின்றாங்கே
உனையும் எனையும் ஊராரையும் எந்நாளும்
உதவிக்கரம் நீட்டி துயரும் போக்கி
உய்விக்கும் இறைவனவன் காலடிகளில் சரணம் !

கருத்துகள் இல்லை: