திங்கள், 25 பிப்ரவரி, 2019

என்ன எழுதுவேன்

என்ன எழுதுவேன் ஏதோ ஒன்றா
எதுகை மோனை வருமா எழுத்தில்
காதல் இயற்கை சமுதாயம் அறிவுரை
கற்பனைக்கு கடிவாளம் உண்டா இல்லையா
கருத்து சொல்லவா வேண்டாமா கேள்விகள்
வெறும் வார்த்தை ஜாலமா வேடிக்கையா
பொறுப்பாய் அழகுத் தமிழில் வடிவமைக்கவா
இத்தனை கேள்விகள் மனதில் இருந்திட
புத்தனை நினைக்க மன அமைதி கொள்ளும்
பாரதியை நினைக்க ரௌத்திரம் பெருகுமோ
கம்பனை நினைக்க காவியம் தோன்று்மோ
கண்ணனின் தாசன் நினைக்க பாடல் வருமோ
நினைத்துக் குழம்பி நித்திரை கலைய
நிதமொரு கவிதையாய் இதுவே இன்று !

கருத்துகள் இல்லை: