திங்கள், 25 பிப்ரவரி, 2019

பாட்டு வர மறுக்குதைய்யா

பாட்டு வர மறுக்குதைய்யா
பாடல் சொல்லத் தயங்குதய்யா
வறண்டு போச்சோ கற்பனையே
வளமான வார்த்தை தேடி
கூடுவிட்டுக் கூடுபாயும் சங்கதியோ
கூட்டிப் பார்க்க சொல் வரலே
பாடுபட்டு எழுத வந்தா
பாவியந்த சந்தம் எங்கே
கண்ணை மூடி கிட்டு
கவிதையை யோசிச்சு முடிச்சா
காத்தாடி நூல்போல அறுபடுது
கலைதான் வேணுமோ கருத்துரைக்க
கவிஞர் அவரேதான் அழகழகா
கற்கண்டா கவிதை தந்தார்
காலை ஒன்று மாலை ஒன்று
காய்ச்சலுக்கு மாத்திரை போல்
மருத்துவம் எனக்கும் பாரீர்
மடைதிறந்து கவிதை பாட !

கருத்துகள் இல்லை: