திங்கள், 25 பிப்ரவரி, 2019

எண்ண ஊற்று

பாட்டெழுத நான். நினைத்தேன்
பாடாத பாட்டொன்று உண்டா
நினைத்துப் பார்த்தேன் ஒன்றுமில்லை
இயற்கை இறைவன் காதல்
நட்பு உறவு சமுதாயம்
சாதி மதம் சகலமும்
இனியென்ன நான் எழுத
இல்லையோ வேறெதுவும் யோசித்தேன்
தோண்டத் தோண்ட வற்றாத
மணற்கேணி நீராய் சொற்கள்
கவிதைக்கு கரு மூலம்எது
ஆழ்ந்து யோசித்தேன் அகப்படவில்லை
ஆயினும் ஆயிரமாயிரம் கவிதை
தொன்று தொட்டு தொல்காப்பியம் முதல்
நூல்கள் பல ஏட்டுச் சுவடிகளும்
எழுதக் குறையாத எண்ண ஊற்று
கற்பனைக்கு எல்லையில்லை கவிதைக்கும் !

கருத்துகள் இல்லை: