எங்கே சென்றாயோ என்னவளே
எனை விடுத்து எங்கு சென்றாய்
அருகில் நீயின்றி உறக்கம் வருமோ
அறிந்தும்நீ அரவணைக்க மறுத்தாய்
காக்க வைத்தல் முறை தானோ
காலம் கடந்த பின்னே வருவாயோ
எத்தனை இரவுகள் தனிமைக் கொடுமை
ஏக்கம் மனதில் நிரந்தரமாய் நின்றது
காற்றின் திசையெங்கும் காணேன் உன்னுருவம்
கண் காணா உருவம் கொண்டாயா
கருணை மனம் கொள் விரைவில் வா
காதல் வலியென்றும் கொடுமை அன்றோ
இரவின் இனிமைக்கு இசையே நீதானே
அந்தி சாயுமுன்னே அணைப்பில் வந்துவிடு !
எனை விடுத்து எங்கு சென்றாய்
அருகில் நீயின்றி உறக்கம் வருமோ
அறிந்தும்நீ அரவணைக்க மறுத்தாய்
காக்க வைத்தல் முறை தானோ
காலம் கடந்த பின்னே வருவாயோ
எத்தனை இரவுகள் தனிமைக் கொடுமை
ஏக்கம் மனதில் நிரந்தரமாய் நின்றது
காற்றின் திசையெங்கும் காணேன் உன்னுருவம்
கண் காணா உருவம் கொண்டாயா
கருணை மனம் கொள் விரைவில் வா
காதல் வலியென்றும் கொடுமை அன்றோ
இரவின் இனிமைக்கு இசையே நீதானே
அந்தி சாயுமுன்னே அணைப்பில் வந்துவிடு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக