திங்கள், 25 பிப்ரவரி, 2019

எங்கே சென்றாயோ

எங்கே சென்றாயோ என்னவளே
எனை விடுத்து எங்கு சென்றாய்
அருகில் நீயின்றி உறக்கம் வருமோ
அறிந்தும்நீ அரவணைக்க மறுத்தாய்
காக்க வைத்தல் முறை தானோ
காலம் கடந்த பின்னே வருவாயோ
எத்தனை இரவுகள் தனிமைக் கொடுமை
ஏக்கம் மனதில் நிரந்தரமாய் நின்றது
காற்றின் திசையெங்கும் காணேன்  உன்னுருவம்
கண் காணா உருவம் கொண்டாயா
கருணை மனம் கொள் விரைவில் வா
காதல் வலியென்றும் கொடுமை அன்றோ
இரவின் இனிமைக்கு இசையே நீதானே
அந்தி சாயுமுன்னே அணைப்பில் வந்துவிடு !

கருத்துகள் இல்லை: