காலத்தால் அழியா நட்பு
கடல் கடந்து போனாலும்
கண்ணுக்கு இமைபோல் காத்திருக்கும்
விண்மீனாய் சிதறி நின்று
கண்சிமிட்டி ஒளி வீசும்
பசுமையாய் பரிமளிக்கும் என்றென்றும்
ஊர் விட்டு ஊர் போனாலும்
உறவுக்குக் குரல் கொடுக்கும்
உதவும் கரம் நீட்டும்
உரிமையாய் அழைக்கும் மச்சானென்று
உள்ளத்தில் கள்ளமற்று உருகும்
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவியாய்
கூட்டில் சேரும் கூடிநிற்கும்
பாட்டுக்குள் அடங்கா பண்பிது
பலவும் கற்றிருக்கும் பகுத்தறியும்
பண்பட்ட எம் நட்பு
பலகாலம் நிலைத்திருக்கும்
பாரினில் ஈடில்லை இதற்கு
கல்லூரி முதல் கல்லறை வரை !
கடல் கடந்து போனாலும்
கண்ணுக்கு இமைபோல் காத்திருக்கும்
விண்மீனாய் சிதறி நின்று
கண்சிமிட்டி ஒளி வீசும்
பசுமையாய் பரிமளிக்கும் என்றென்றும்
ஊர் விட்டு ஊர் போனாலும்
உறவுக்குக் குரல் கொடுக்கும்
உதவும் கரம் நீட்டும்
உரிமையாய் அழைக்கும் மச்சானென்று
உள்ளத்தில் கள்ளமற்று உருகும்
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவியாய்
கூட்டில் சேரும் கூடிநிற்கும்
பாட்டுக்குள் அடங்கா பண்பிது
பலவும் கற்றிருக்கும் பகுத்தறியும்
பண்பட்ட எம் நட்பு
பலகாலம் நிலைத்திருக்கும்
பாரினில் ஈடில்லை இதற்கு
கல்லூரி முதல் கல்லறை வரை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக