திங்கள், 25 பிப்ரவரி, 2019

கல்லூரி நட்பு

காலத்தால் அழியா நட்பு
கடல் கடந்து போனாலும்
கண்ணுக்கு இமைபோல் காத்திருக்கும்
விண்மீனாய் சிதறி நின்று
கண்சிமிட்டி ஒளி வீசும்
பசுமையாய் பரிமளிக்கும் என்றென்றும்
ஊர் விட்டு ஊர் போனாலும்
உறவுக்குக் குரல் கொடுக்கும்
உதவும் கரம் நீட்டும்
உரிமையாய் அழைக்கும் மச்சானென்று
உள்ளத்தில் கள்ளமற்று உருகும்
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவியாய்
கூட்டில் சேரும் கூடிநிற்கும்
பாட்டுக்குள் அடங்கா பண்பிது
பலவும் கற்றிருக்கும் பகுத்தறியும்
பண்பட்ட எம் நட்பு
பலகாலம் நிலைத்திருக்கும்
பாரினில் ஈடில்லை இதற்கு
கல்லூரி முதல் கல்லறை வரை !

கருத்துகள் இல்லை: