திங்கள், 25 பிப்ரவரி, 2019

நாளைய சமுதாயம்

கேள்விகள் பலவுண்டு பதில் சொல்ல ஆளில்லை
காசுக்குப் பணியாத கயவர்கள் இங்குண்டா
வாய் திறந்தால் பொய்யன்றி வேறுண்டா
வானத்து நட்சத்திரம் உன்வாசல் வருமா
கோடியில் புரண்டு குடிசையில் வாழ்வரோ
கோமாளி நீயாநானா கேட்டுப் பார்
ஓட்டுக்குக் கூட்டணி காலையும் தொடுமா
ஓயாத பகையும் ஒரேநாளில் ஓயுமா
பகை நாட்டில் ஓட்டிருந்தால் நாடே விலை போகும்
யாருக்கும் வெட்கமில்லை எதையும் உண்போம்
யாசகம் என்ன வஞ்சகமும் செய்வோம்
மக்களுக்கு அல்ல மகளுக்காக மகனுக்காக
மலைபோல சேர்த்து வைப்போம் மறுபிறவிக்கும்
சேற்றில் உழைக்குமவன் மண்ணோடு போகட்டும்
சேர்த்த சொத்தோடு சமாதிக்கு தங்கப்பேழை செய்
நாளைய சமுதாயம் சாக்கடை ஆகட்டும்
நாம் மட்டும் சந்தனக் கட்டிலிலே உறங்குவோம்!

கருத்துகள் இல்லை: