வந்தியத் தேவனாய் இளஞ்செழியனாய்
அருண்மொழிவர்மனாய் சரித்திர வீரனாய்
பிறந்து போரிட ஆசை
மார்பிலே ஏற்ற விழுப்புண் கணக்கிடவும்
அரண்மனைச் சாரளத்தில் நின்று தொலைநோக்கி
அகில உலகும் ஆண்ட பரம்பரையாய்
தோள்கள் தினவெடுக்க
புரவியேறி காடுமேடெல்லாம்
காற்றினும் விரைந்து சுற்றிவரவும்
பாய்மரக் கப்பலேறி கடல்கடந்து சென்று
வணிகம் வளர்க்கவும் வசப்பட வைக்கவும்
மனதிலே பலப்பல ஆசை உண்டு
கல்கி சாண்டில்யன் பாத்திரங்களாய் மாறி
மஞ்சளழகி குந்தவை யவனராணி எமிலி
நாயகியரோடு வலம் வரவும் உறவாடவும்
நான் என்ன செய்ய வேண்டும்
பின்னோக்கிச் செல்ல கால இயந்திரம் வேண்டுமோ ?
அருண்மொழிவர்மனாய் சரித்திர வீரனாய்
பிறந்து போரிட ஆசை
மார்பிலே ஏற்ற விழுப்புண் கணக்கிடவும்
அரண்மனைச் சாரளத்தில் நின்று தொலைநோக்கி
அகில உலகும் ஆண்ட பரம்பரையாய்
தோள்கள் தினவெடுக்க
புரவியேறி காடுமேடெல்லாம்
காற்றினும் விரைந்து சுற்றிவரவும்
பாய்மரக் கப்பலேறி கடல்கடந்து சென்று
வணிகம் வளர்க்கவும் வசப்பட வைக்கவும்
மனதிலே பலப்பல ஆசை உண்டு
கல்கி சாண்டில்யன் பாத்திரங்களாய் மாறி
மஞ்சளழகி குந்தவை யவனராணி எமிலி
நாயகியரோடு வலம் வரவும் உறவாடவும்
நான் என்ன செய்ய வேண்டும்
பின்னோக்கிச் செல்ல கால இயந்திரம் வேண்டுமோ ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக