திங்கள், 25 பிப்ரவரி, 2019

க முதல் ன வரை

கற்றதோ கையளவு 
கல்லாதது உலகளவு
வங்கத்து நீரில் பயிர் செய்ய பாரதி அல்ல
சந்திப்பிழையும் சந்தப்பிழையும் இல்லா
ஞானியர் ரசிக்கும் கவிபுனையும்
மட்டக்கவி நான் மன்னியுங்கள்
மணம் வாசம் உண்டோ அறியேன்
தோன்றும் கற்பனையில் வரிகள்
நன்றோ தீதோ நீவிர் அறிவீர்
பயன் உண்டாயின் நன்று பாட்டதனால்
மன விடு தூது என்று சொன்னேன்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றேன்
ரகசியமாய் சில பாக்கள் உதிர்க்கும்
இலக்கில்லா கவியும் உண்டு
வருவதை வடிக்கும் வண்ணமொழி உண்டு
கள்ளுண்ட குரங்காய் சில நேரம்
கற்ற பெரியாராய் சிலநேரம்
எனக்குள்ளே என்றும் அவளே
தமிழ்த்தாயே போற்றிடுவேன் என்றும் நின்னை !

கருத்துகள் இல்லை: