திங்கள், 25 பிப்ரவரி, 2019

வந்திடும் மீண்டும் வாலிபம்

சிறு துளியாய் தோன்றி
சிறுகச் சிறுக பெருகி
நூறைக் கடந்து நின்று
பெருவெள்ளமாய் கண்முன்னே
மலைத்துப் போனேன் உண்மைதானா
நாளொன்றில் பல உள்ளங்கள்
நாம் படித்த கல்லூரி கால்பதிக்க
ஆர்வம் கொள்ள பல்கிப்பெருகியது
கடல்கடந்து தாய்மடி காண
கற்பித்த கோயில் கடவுளர் போல
அறுபது கடந்த இளைஞரணி
நாற்பது நிறைவை பிறந்த வீட்டில்
ஒன்றாய் கூடி ஒருசேர நின்று
மறவாத நாளாய் மாற்ற விழைந்தனர்
வாழ்க்கை ஏட்டில் வைரமாய் ஒளிர்விட
வாருங்கள் நண்பர்காள் கூடிமகிழ்வோம்
வந்திடும் மீண்டும் வாலிபம் அன்று !

கருத்துகள் இல்லை: