திங்கள், 25 பிப்ரவரி, 2019

மனைவி

சொந்தமென்று வந்து நின்று
சொக்க வைத்தவளே 
சாதிசனம் சேத்து வச்ச
சம்சார திருவிளக்கே
வாய்க்கு ருசியா சமைச்சு
வயிற்றை நிறைத்தவளே
உன் வயிற்றில் சுமந்து
வாரிசை வளர்த்தவளே
காலை முதல் மாலை வரை
பம்பரமாய்ச் சுற்றிவந்து
கடைசியாய்த் தூங்கி முதலில் விழித்தெழுந்து
கவளச்சோறும் சாப்பிட நேரமில்லா
பெண்ணாய் வந்தாய் தாரமாயானாய்
தாயாய் உருமாறி தளர்ந்து தடுமாறி
தாதியாய் பாட்டியாய் தாலாட்டுப் பாடி
பெண்ணின் பெருமை பேணிக் காத்தாய் !

கருத்துகள் இல்லை: