திங்கள், 25 பிப்ரவரி, 2019

மௌனம் பேசும்

நீ உறங்கிய வேளையில் விழித்திருந்தேன்
இமைகளை மூடிட விழையவில்லை 
விழிகளில் நீ
காலம்தான் எத்தனை வேகம் பறந்தோடிற்று
கைகள் இணைந்து நடந்த நாட்கள்
காற்று ஊடுருவ கைகள் இறுகும்
மனதினில் எண்ண ஓட்டம் மயக்கநிலை
மந்திரச் சொல்போல் உன் வார்த்தை
பேசிப் பேசியே பொழுதெல்லாம் கடக்கும்
பேசாமலே சிலநாட்கள் மௌனம் பேசும்
பிரியும் சிலநேர
ம்  பித்தம் பிடிக்கும்
தெரிந்தே சிலநாட்கள் தேம்பி அழும்
ஓய்ந்து போயிற்று உடலின் சுழற்சி
ஓடமுடியாத வயதில் ஒவ்வொன்றாய் மனத்திரையில்

கருத்துகள் இல்லை: