திங்கள், 25 பிப்ரவரி, 2019

இனியவை செய்து வாழ் !

பொன்னும் பொருளும் உன்னோடு வாரா
என்றும் துணையாக மனையாளும் இல்லை
கண்ணே மணியே என்ற உறவும் தொடரா
மண்ணுக்குப் போகும் உடலோடு யாதுமில்லை
சொல்வதற்கு எளிதே செல்வம் சேரவழி
சொத்து சேர்ந்தபின்னே சொர்க்கம் வருமோ
கட்டுக் கட்டாய் பணமிங்கே பிணம் எரியூட்டுமோ
காசுபணம் சேர்த்தே காலமெல்லாம் போச்சே
காலன் வரும் வேளை கண்விழிப்பு வருமோ
கடவுளே என்ற கூக்குரலும் எழுமோ
என்ன வாழ்க்கையடா மானிட நண்பா
எதைக் கொணர்ந்தாய் எதனைக் கொண்டு செல்வாய்
இன்று இருப்போன் நாளை இல்லை
இருக்கும் காலந்தனில் இனியவை செய்து வாழ் !

கருத்துகள் இல்லை: