திங்கள், 25 பிப்ரவரி, 2019

ஏனிந்தக் கோபம் ?

மேக ஆடை முகம் மறைக்க
மெல்லியலாள் நிலா முகத்தாள்
கணநேரம் ஒளி இழந்தாள்
கண்ட வான் வெளியோ
முகம் சுருங்கி இருண்டான்
மலையரசன் கோபம் கொண்டான்
காற்றின் வரவால் கலைந்த மேகம்
நிலாமகள் முகம் காட்ட
கண்சிமிட்டும் தாரகைக் கூட்டம்
களுக்கென்று சிரித்து மகிழ
மலையரசன் முகமதில் ஒளிவெள்ளம்
கணப்பொழுதில் எத்தனை மாற்றம்
இயற்கை என்றாலே அழகு !

கருத்துகள் இல்லை: