திங்கள், 25 பிப்ரவரி, 2019

பாரதியே மறுமுறை பிறப்பாயா ?

வீறு கொண்டு எழவைக்கும் வரிகள்
வீணர்கள் கண்டு கோபமுறும் கண்கள்
பாட்டுச் செல்வமொன்றே பாரதியே
பாழும் காலன் பறித்துக் கொண்டானே
ஏட்டில் யாம் எழுதும் வரி உனதே
ஏனோ உன்மீசை மீது மோகமுற்றேன்
சொற்களில் கனல் தெறிக்கக் கண்டேன்
தேசத்தின் நேசம் தெறித்த வார்த்தைகள்
பாசம் பணிவு ஒற்றுமை காதல்
பராசக்தி கண்ணன் குயில் அனைத்தும்
அழகான வரிகளில் அடுக்கடுக்காய்
காதலுற்றேன் உன்மேலே காணாமல் தவிக்கின்றேன்
மறுமுறை பிறப்பாயா ? மனம் ஏங்குகிறேன் !

கருத்துகள் இல்லை: