வான் பொய்ப்பினும்
தான் பொய்யாக் காவிரி
வறண்டது போல்
வசப்படவில்லை வார்த்தைகள்
வயதில்லை இதற்கு
வாஞ்சை நெஞ்சில்
வாலிபமென்ன வயோதிகமென்ன
இதயம் என்றும் இளமை
இருமனங்கள் ஒன்றானால்
இனிக்கும் கற்கண்டாய்
கன்னல் சுவையும் கடைசியில்தானே
ஓடிவிளையாடி ஓயாதே
ஓயுமிடம் ஒன்றேயொன்று
பசுமை நினைவுகள்
மனவெளியின் சித்திரங்கள்
ஓவியமாய் ஒளிர்ந்திருக்கும்
வண்ணம் தொலையாமல்
கண்கள் காணட்டும் !
தான் பொய்யாக் காவிரி
வறண்டது போல்
வசப்படவில்லை வார்த்தைகள்
வயதில்லை இதற்கு
வாஞ்சை நெஞ்சில்
வாலிபமென்ன வயோதிகமென்ன
இதயம் என்றும் இளமை
இருமனங்கள் ஒன்றானால்
இனிக்கும் கற்கண்டாய்
கன்னல் சுவையும் கடைசியில்தானே
ஓடிவிளையாடி ஓயாதே
ஓயுமிடம் ஒன்றேயொன்று
பசுமை நினைவுகள்
மனவெளியின் சித்திரங்கள்
ஓவியமாய் ஒளிர்ந்திருக்கும்
வண்ணம் தொலையாமல்
கண்கள் காணட்டும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக