திங்கள், 25 பிப்ரவரி, 2019

பசுமை நினைவுகள்

வான் பொய்ப்பினும் 
தான் பொய்யாக் காவிரி
வறண்டது போல்
வசப்படவில்லை வார்த்தைகள்
வயதில்லை இதற்கு
வாஞ்சை நெஞ்சில்
வாலிபமென்ன வயோதிகமென்ன
இதயம் என்றும் இளமை
இருமனங்கள் ஒன்றானால்
இனிக்கும் கற்கண்டாய்
கன்னல் சுவையும் கடைசியில்தானே
ஓடிவிளையாடி ஓயாதே
ஓயுமிடம் ஒன்றேயொன்று
பசுமை நினைவுகள்
மனவெளியின் சித்திரங்கள்
ஓவியமாய் ஒளிர்ந்திருக்கும்
வண்ணம் தொலையாமல்
கண்கள் காணட்டும் !

கருத்துகள் இல்லை: