திங்கள், 25 பிப்ரவரி, 2019

காட்டாறாய் கவிதை

பாட்டுக்குப் பாட்டெடுத்து
பாடுவதே இன்பமன்றோ
தேடிய போதெல்லாம்
ஓடிவரும் வார்த்தைகளை
கோர்வையாய்ச் சேர்த்து
கொஞ்சு தமிழ்ச் சொற்களிலே
கவிதைகளாய்ப் புனையும்போது
கற்பனை ஊற்றெடுத்து
காட்டாறாய் ஓடுதிங்கே
இத்தனை நாள் ஒளிந்துநின்று
வேடிக்கை பார்த்ததுவோ
வியப்பாய் என்னுள்ளம்
விடியும் போதெல்லாம்
மடைதிறந்த மனதில்
வெள்ளப் பெருக்காய்
அருவியாய் என்கவிதை !

கருத்துகள் இல்லை: