பக்தி என்று சொன்னார்
பாடல் ஒன்று வேண்டினார்
எந்த பக்தி யோசித்தேன்
தாய் மீது குழந்தையினதா
தாரமவள் தன்னவன் மீதா
மாணவன் கு்ருவின் மீதா
பக்தனவன் கடவுளர் மீதா
யாதொன்று கொண்டாலும் உயர்வே
மனதில் மகிழ்வொன்று முகிழ்க்கும்
உள்ளம் உருகிக் கசியும்
மனமங்கே ஏகாந்த வெளியில் உலவும்
மன அமைதி கொள்ளும்
தெளி வொன்று பிறக்கும்
உறவொன்று உருவாகி உள்ளுறையும் !
பாடல் ஒன்று வேண்டினார்
எந்த பக்தி யோசித்தேன்
தாய் மீது குழந்தையினதா
தாரமவள் தன்னவன் மீதா
மாணவன் கு்ருவின் மீதா
பக்தனவன் கடவுளர் மீதா
யாதொன்று கொண்டாலும் உயர்வே
மனதில் மகிழ்வொன்று முகிழ்க்கும்
உள்ளம் உருகிக் கசியும்
மனமங்கே ஏகாந்த வெளியில் உலவும்
மன அமைதி கொள்ளும்
தெளி வொன்று பிறக்கும்
உறவொன்று உருவாகி உள்ளுறையும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக