திங்கள், 25 பிப்ரவரி, 2019

பக்தி

பக்தி என்று சொன்னார் 
பாடல் ஒன்று வேண்டினார்
எந்த பக்தி யோசித்தேன்
தாய் மீது குழந்தையினதா
தாரமவள் தன்னவன் மீதா
மாணவன் கு்ருவின் மீதா
பக்தனவன் கடவுளர் மீதா
யாதொன்று கொண்டாலும் உயர்வே
மனதில் மகிழ்வொன்று முகிழ்க்கும்
உள்ளம் உருகிக் கசியும்
மனமங்கே ஏகாந்த வெளியில் உலவும்
மன அமைதி கொள்ளும்
தெளி வொன்று பிறக்கும்
உறவொன்று உருவாகி உள்ளுறையும் !

கருத்துகள் இல்லை: