திங்கள், 25 பிப்ரவரி, 2019

உழவரின் திருநாளாம்

புத்தரிசி புது வெல்லம்
புதுக்கரும்பு புதுமஞ்சள்
புதுப்பானை புதிய அடுப்பு
கிழங்கு காய்கறிகள் பயறு 
பொங்கிவரும் வேளை
பொங்கலோ பொங்கலென்றும்
கதம்பக் காய்கறிக் குழம்போடு
வெண்பொங்கல் வெல்லப் பொங்கல்
கரும்பும் இலைவேர்களுடன்
இலைகளிலே படையலிட்டு
தந்நை தாய் உடன்பிறந்தோரோடு
புத்தாடை அணிந்து
புதுப் பொலிவோடு
ஆரத்தி எடுத்து
அகமகிழும் நாளே
தமிழரின் திருநாளாம்
உழவரின் திருநாளாம்
உளமகிழ்வோடு உணர்ந்திடுவோமே !

கருத்துகள் இல்லை: