திங்கள், 25 பிப்ரவரி, 2019

அனைத்தும் அனுபவம்

நானொரு மனிதனாக 
நாளொரு பொழுதினில்
புவிதனில் பிறந்ததாலே
புதியதோர் உருவமேற்றேன்
தந்தையும் தாயும்
விந்தையாய் வியந்து
ஈன்ற மகவை நோக்க
பிறந்த நானோ சிரித்தேன்
பிறத்தலும் இறத்தலும்
முதலும் முடிவுமாயின்
இடையினில் நடப்பவை
எழுதிய கவிஞன் யாரோ ?
கற்றவை கேட்டவை
கண்டவை பட்டவை
அனைத்தும் அனுபவம்
சுழலும் உலகமதில்
பம்பரமாய்ச் சுற்றிநின்று
அமைதி கொள்கையிலே
ஆங்கோர் கேள்வி
நான் பிறந்ததேன் ?
விடை காண முடியா
முடிச்சாய் என்முன்னே!

கருத்துகள் இல்லை: