புதன், 31 மார்ச், 2021

பாசமகள்

 என்னைத்தான் என்னத்தான் எண்ணித்தான் வந்தானோ

எத்தனவன் சித்தமதில் பித்தம் கொண்டானோ
சொந்தமென பந்தம் வந்ததோ மனதில்
சொல்லாமல் கள்வனவன் பல்லிளித்து வருவானோ
ஏக்கமது மனதுள்ளே சொக்க வைத்தானே
தூக்கமது எனைவிடுத்து துக்கமுறச் செய்தானே
பாக்கும் வெற்றிலையும் பரிசம்போட வருவானா
நோக்கும் திசையெங்கும் பார்ப்பது அவனுருவம்
பாவிமகன் பரிதவிக்க விட்டென்னை போனதெங்கே
பாசமகள் காத்திருக்கேன் பறந்தோடி வருவாயா ?

கருத்துகள் இல்லை: