புதன், 31 மார்ச், 2021

கற்பனை உலகம்

 நீரூற்று நிலமதை பாதையாக்கி ஓடையானது

நீலவானில் நிலவதுவோ புவியதனைச் சுற்றிவந்தது
காற்றோடு உறவாடி மரங்களங்கே சலசலத்தன
நாற்றம் சுமந்த மலர்கள் நாசிக்குள்
பனித்துளிகள் புல்நுனியைப் புகலிடமாய்க் கொண்டன
பகலவன் கதிரலைகள் விடியலைக் கொணர்ந்தன
மலையுச்சி மேகமதைத் தழுவி மகிழ்ந்தது
அலைகள் அடுத்தடுத்து கரைசேர்ந்து கரைந்தது
கூடுவிட்டுப் புள்ளினங்கள் இரைதேடிப் பறந்தன
காடுவிட்டு காடுகடந்து விலங்கினமோ இரைதேடின
பாடுபட்டு உழைத்தவனோ களத்து மேட்டில்
பகற்கனவில் கற்பனை உலகம் கண்டான்

கருத்துகள் இல்லை: