நல்ல மனமிருந்தால் நல்லதே நடக்கும்
சொல்லில் செயலில் உண்மை மிகுந்திருக்கும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாது
கள்ளமற்ற சிரிப்பை கண்களும் உதிர்க்கும்
கபடம் தெரியாது கள்வம் அறியாது
விகடம் பேசும் வியக்க வைக்கும்
சொல்லும் சொல்லில் சொக்க வைக்கும்
நல்ல எண்ணங்கள் நன்மை பயக்கும்
வறுமை போக்கும் வளமை சேர்க்கும்
பொறுமை மனதில் பொல்லாப்பு இல்லை
அரியது ஆனது ஆங்காங்கே ஒன்றாய்
அழகிய மனமே அன்பின் இருப்பிடம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக