புதன், 31 மார்ச், 2021

பெண்ணெனும் பிறவி்

 ஆடி வரும் அசைந்து வரும்

ஓடி வரும் ஒய்யாரமாய் வரும்
தேடி வரும் தென்றலாய் வரும்
நாடி வரும் நளினமாய் வரும்
போடி என்ற சொல்லில் சிணுங்கும்
கோடி கொடுத்தாலும் கிடைக்காத அன்பு
வாடி என்றதுமே வந்து ஒட்டும்
அடியே என்றழைக்க அழகாய்ச் சிரிக்கும்
வடிவாய் முகத்துடனே வலம் வரும்
சேடியாய் சேயாய் தாயாய் மாறும்
பாடிய காவியங்கள் பலவும் அவள்புகழை
பெண்மைக்கு விழாவெடுக்க ஒருநாள் போதுமா
பெற்றவள் உற்றவள் உடன்பிறந்தாள் தோழியென
உடன் வருவாள் வாழ்வு முழுதும்
உன்னதமே பெண்ணெனும் பிறவி் நன்றே !

கருத்துகள் இல்லை: