புதன், 31 மார்ச், 2021

கரிநாக்கு

 ஊர்க்குருவி ஒண்ணு உலகெல்லாம் பறந்ததாம்

பேர்சொல்ல நல்லதா தகவல தேடுச்சாம்
யார்செஞ்ச பாவமோ தேறுனது எதுவுமில்லே
கழுதை தேஞ்சு கட்டெறும்பா ஆச்சுதோ
விழுது விட்ட ஆலமரம் பழுதாச்சோ
புரியாத புதிரா ஊரெங்கும் மாயவலை
எரிகின்ற நெருப்புலே எண்ணெய் ஊத்துனாப்போல
பரியேறிப் போனவன் பரதேசம் போய்விட்டான்
கரிநாக்கு சொன்னதுவோ சரியாத்தான் போச்சுதிப்போ
நரிக்கூட்டம் நாடெங்கும் நல்லமான் காணலியே
பழகித்தான் போச்சோ பாவிமக்கா பாழும்வாழ்வு
உழவுக்கும் தொழிலுக்கும் நிந்தனை செய்தோம்
பாதையும் தெரியாம பரிதவிச்சு தடுமாறி
பேதையா போனோமடா நல்லவழி எங்கேயடா ?

கருத்துகள் இல்லை: