புதன், 31 மார்ச், 2021

இரங்கற் பா

தலை குனிய வைத்த குடிசை

கலை நயம் யாதும் இல்லை
மின் விளக்கும் வாராத காலம்
என் பெரிய அன்னை குடில்
கிழக்கு வாசல் மஞ்சம்புல் கூரை
வழக்கில் உண்டு சாணப் பூச்சு
தரை எங்கும் அறை இரண்டும்
வாசல் முச்சூடும் சாணத் தெளிப்பு
வாசனை உண்டு செம்மறி ஆடு
விடுமுறை நாட்கள் ஒவ்வொரு ஆண்டும்
வடுவாய் மனதில் பதிந்த இளமை
கண்ணே என்றழைத்து சூடாய் இட்லி
களியோடு சிலநாளும் கைக்குத்தல் அரிசிச்சோறு
வார்த்தையில் குளிரூட்டும் அன்பும் ஊட்டும்
வாராது போனநாட்கள் போனாளே அவளுமின்று
பெரியம்மா அழைப்பதற்கு அவளில்லை இன்று
பெரிதான இழப்பதுவே இறையடி சென்றடைந்தாள்
நாய்க்கனேரி கிராமத்து கடையான மூத்தஉறவு
வாய்க்குமா மறுவாழ்வில் அவளன்பின் அணைப்பு !
இறந்த நாள் .12/02/2021

கருத்துகள் இல்லை: