புதன், 31 மார்ச், 2021

முதல் காதல் நாயகி

 என் இரண்டு கண்களிலே பூத்தவளே

பண் பாடி தாலாட்டி உறங்க வைத்தவளே
சொல்லாத ஊருக்கு பயணித்துப் போனாயோ நீ
பொல்லாத பெண்ணே நீயில்லாத தவிப்பில் நான்
கல்லாக உன்மனதோ கருணை இல்லாமல் போனதுவோ
காலங்கள் கடந்தோடி கால்களும் சோர்ந்து விட்டதடி
அன்று போனவளே அக்கரையை சேர்ந்தாயோ சொல்
என்று உன்முகம் காண்பேன் விடை சொல்வாயா
தெருக் கோலம் போட்ட நாட்கள் நினைவுண்டா
தெரியாமலே போனவளே தேடி நான் வரவா
முதல் காதல் நாயகியே முகம் காணமுடியாதா
முற்றும் எழுதவோ முடிந்த கதை இதற்கு

கருத்துகள் இல்லை: