புதன், 31 மார்ச், 2021

எனக்குப் பிடித்த நகரம்

 எனக்குப் பிடித்த நகரம்

என்னோடு வளர்ந்த நகரம்
வந்தாரை வாழவைக்கும் நகரம்
வளமான நாகரீக நகரம்
சென்னை அதன் பெயராம்
என்ன இல்லை இங்கே
பழமையும் புதுமையும் கலந்தே
ஏழ்மையும் செல்வமும் சேர்ந்தே
கற்றலின் சிறப்பும் இங்கே
கல்லூரிகள் பலவும் உண்டே
கடற்கரைக் காற்றின் பெருமை
கற்பிக்கும் காதலும் சேர்ந்து
கோயி்ல்கள் கோபுரங்கள் பலவும்
கோலங்கள் சுமந்த தெருக்களும்
மாதாகோவில்கள் மசூதிகள் என்றும்
மதங்களைக் கடந்த ஒற்றுமை
மொழியொன்றும் உண்டு தனியாக
வழிவழியாகவந்த சென்னைத் தமிழதுவே
வலம்வர இடங்கள் பலவும்
வசதிக்குக் குறைவில்லை இங்கே
வணக்கம் சென்னை வசப்பட்டேன்
வண்ணக் கலவைகள் வானவெளியில்

கருத்துகள் இல்லை: