புதன், 31 மார்ச், 2021

வல்லூறு

 நல்லதோர் வீணை தேடி நாடெங்கும் பயணம்

நலிந்தோர் நலம் நாடி வீதியெங்கும் போராட்டம்
சொல்லும் பொய்களுக்கு அளவில்லா தலைமைப் புளுகர்கள்
வெல்லும் உண்மையென காத்திருக்கும் எங்கள் உள்ளம்
வஞ்சகம் தலை விரித்தாடும் அவலம் நாட்டிலே
கொஞ்சமும் வெட்கமின்றி உலா வரும் உன்மத்தர்
நெஞ்சு பொறுக்குதிலை நிலையற்ற சமுதாய நிலைகண்டு
அஞ்சிச் சாவதொன்றே வழியாமோ விடியல் இல்லாமல்
நல்லோர் உலகில் மறைந்து போயினரோ ஐயமுண்டு
வல்லூறு வட்டமிடும் வானில் வாழ்வே கேள்வியாய்
குவியும் செல்வமெலாம் ஓரிடத்தில் குற்றம் இதுவன்றோ
குடிகள் சோகமுற கும்மாளம் இவர் உலகில்
வேதனை மாறுமோ வேடிக்கை மனிதர் ஒழிவரோ
வேதாளம் ஆட்டத்தில் நாடிங்கே பாதாளம் நோக்கி !

கருத்துகள் இல்லை: