புதன், 31 மார்ச், 2021

பண்பாளர் கடன்

 வார்த்தைகள் விளையாடும் வந்தொரு கவிநாளும்

வாதங்கள் தொடரும் வளமான தமிழதனில்
யாருக்கு வெற்றியென போராடும் குணமில்லை
ஊருக்கு நல்லதொன்று நடந்தாலே போதுமென்று
சேற்றிலே செந்தாமரை பூத்திடும் நாளுக்காய்
காற்றில் தூதுவிடும் கவிஞர் நாமெல்லாம்
சேருமென்று செவிகளில் நாளுக்கொன்றாய் நல்கவிதை
கருத்து சுமந்து இதயத்தைத் தொடுவதுண்டு
நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும்
கல்லான மனதுக்கும் சேருமென்ற நப்பாசை
செயல் செய்வது எம் கடன்
பயன் தருவது பண்பாளர் கடன்

கருத்துகள் இல்லை: