புதன், 31 மார்ச், 2021

புதிரோநீ !

 எனக்குள்ளே உறைவாயோ எங்கிருந்து வந்தாயோ

எதற்காக சொல்வாயா என்னவென்று நினைப்பேனோ
கண்ணுக்குள்ளே முத்துக்களோ காதோரம் பேசுவையோ
கண்ணான கண்மணியோ கள்ளமற்ற அன்புருவோ
வருவதும் தெரிவதில்லை வாழ்வதும் புரியவில்லை
உருவம் உனக்கில்லை உருகவைக்க தெரியுமானால்
சிரிப்பது சிலநேரம் சிந்திப்பது பலநேரம்
சிந்தும் கண்ணீரும் குறையாது உன்நினைவால்
யாரென்ற கேள்விக்கு யாதொரு பதிலில்லை
பேரொன்று உண்டோ சொல்வாயோ புதிரோநீ !

கருத்துகள் இல்லை: