புதன், 31 மார்ச், 2021

தை

 மனிதனைப் படைத்தவன் இயற்கையோ இறையோ

மதங்களைப் படைத்தவன் இவனோ எவனோ
மனதினில் இன்பம் பெருகிடும் விழாக்கள்
மனிதம் நிறைந்த உள்ளங்கள் மகிழ்வில்
இயற்கையை வணங்க இணைகிற நாட்கள்
இல்லங்கள் தோறும் வண்ணக் கோலங்கள்
முன்னோர் பெரியோர் முழுமனது கொண்டோர்
முக்காலம் உணர்ந்தோர் ஐம்பூதங்கள் தொழுதோர்
நன்றி சொல்வதில் ஒற்றுமை கண்டார்
நல்லது எதிலும் நிறைதலை உணர்ந்தார்
கதிரவன் முதலாய் கதிர்கள் வரையிலும்
காளைகள் முதலாய் கன்றுகள் வரையிலும்
கருத்தினில் வைத்தார் கரும்போடு சேர்த்தார்
பருவம் தோறும் பல்வகை விழாக்கள்
தையென ஒன்றும் வந்திடும் நாளில்
தமிழர் திருநாளெனக் கொண்டாடி மகிழ்வார்

கருத்துகள் இல்லை: