மெல்லிய மேகம் தழுவும் மலைமுகடு
கல்லுக்கும் குளிரும் காலைப் பொழுது நடுக்கம்
பரவிய தேயிலைத் தோட்டங்கள் பாக்கு மரங்கள்
வரவுக்கு கட்டியம் கூறும் சூரியக் கிரணங்கள்
வளைந்து உயர்ந்து செல்லும் சாலைகளின் ஊர்வலம்
களைப்பின்றி கண்கள் காணக் கிடைக்கும் காட்சிகள்
உயிர்க் கூடாய் உடலிருக்க உள்ளம் குளிர்விக்கும்
இயற்கையோடு இணைந்த வாழ்வு இன்பம் சேர்க்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக