புதன், 31 மார்ச், 2021

மதம் கொண்டாயா

 இன்றோ நாளையோ இருப்பதோ போவதோ

என்றோ எங்கோ பிறந்த உயிரே
சொல்லிடு உண்மை மனிதன் தானே
சொந்தமா இந்த மண்ணும் உனதா
மதம்தனைப் பிடித்து மதம் கொண்டாயா
மரணம் வருங்கால் ஆறடியோ அக்னியோ
எதுவரும் உன்னோடு அறுதியாய் கூறுவாயா
எத்தனை காலமாய் பித்தம் உனக்கு
இரத்தம் எலும்பு சதையால் ஆனதே
இறைவன் படைப்பில் இல்லை வேற்றுமை
திருந்தவும் திருத்தவும் இயலாத் திமிருனக்கு
தீர்ப்பு நாளில் தீயால் பொசுங்கிடுவாய் !

கருத்துகள் இல்லை: