இன்றோ நாளையோ இருப்பதோ போவதோ
என்றோ எங்கோ பிறந்த உயிரே
சொல்லிடு உண்மை மனிதன் தானே
சொந்தமா இந்த மண்ணும் உனதா
மதம்தனைப் பிடித்து மதம் கொண்டாயா
மரணம் வருங்கால் ஆறடியோ அக்னியோ
எதுவரும் உன்னோடு அறுதியாய் கூறுவாயா
எத்தனை காலமாய் பித்தம் உனக்கு
இரத்தம் எலும்பு சதையால் ஆனதே
இறைவன் படைப்பில் இல்லை வேற்றுமை
திருந்தவும் திருத்தவும் இயலாத் திமிருனக்கு
தீர்ப்பு நாளில் தீயால் பொசுங்கிடுவாய் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக