புதன், 31 மார்ச், 2021

குழப்பம் மனதில்

 நல்முத்துக்கள் காணற்கரியவை கிளிஞ்சல்கள் மணல்வெளியெங்கும்

சொல்வதொன்றும் செய்வதொன்றும் வாடிக்கையாய்ப் போயிற்று
விதைகள் தவறாய்ப் போனதால் விளைவதும் பதராயிற்று
கதைகள் பலவும் மயக்கும் வார்த்தைகளில்
நல்லது எங்கேயென தேடுதல் வேட்டையானது
பொல்லாதது ஆட்சிக் கட்டிலில் கபடநாடகம்
எங்கே போகிறோம் அறிவதே கடினமாய்
எங்கும் மாயவலைகள் மனிதர்கள் மயக்கத்தில்
மாறிடுமா இந்நிலை வளமுறுமா வாழ்க்கை
கூறுவதற்கு யாருண்டு குழப்பம் மனதில்

கருத்துகள் இல்லை: