புதன், 31 மார்ச், 2021

சூரத் பயணம் (2)

மறுநாள் காலை மகாலட்சுமி கோயிலுக்குச் சென்ற போது சிறிய வரிசையில் பல் வயது மனிதர்கள். மிகவும் பிரபலமான ஆலயம், மராட்டிய சிவாஜி வழிபட்ட ஆலயம் என்பர். தரிசனம் முடித்து காலையுணவு முடித்து மீண்டும் பயணம்.

இரண்டாவது இலக்கு பம்பாய் என முதலே முடிவெடுத்தது.
நெடுஞ்சாலை நன்றாக இருந்த சில இடங்களில் ஸ்பீட் டெஸ்ட் நூற்றைம்பது கிமீ வரை. சதாரா குன்றுகளைக் கடந்து, பூனாவையும் கடந்து, ஹைவே தொட்டபோதே இருட்ட ஆரம்பித்து விட்டது. இந்த ஹைவே அனைவரும் அறிந்தது, வேகமாகப் பயணிக்க ஏதுவானது.
பம்பாயை அடைந்து போக்குவரத்து நெரிசலில் ஓட்டுவது ஒரு அனுபவமே.
ஓரிடத்தில் சிக்னலைக் கடக்கும் போது ரெட் சிக்னல் விழவும், நின்றிருந்த போலீஸ்காரர் மடக்கவும் சரியாக இருந்தது.
அவரிடம் வேறு வழியில்லாமல் முந்நூறு ரூபாய் தண்டம் கட்டிவிட்டு முன்னமே புக் செய்த ஓட்டலைச் சேர்ந்து குளியல்போட்டு உணவருந்தி படுத்தபோது சுகமான தூக்கம்.
மறுநாள் காலையில் மங்கள்தாஸ் மார்க்கெட் பிறகு பேன்சி ஐட்டம்ஸ் மொத்த வியாபார இடங்களில் விலைகள் விசாரிப்பும் ஸேம்பிள் ஐட்டங்கள் வாங்குதலும் நடந்தது.
முந்தைய கட்டுரைகளில் சொல்லியிருந்த பர்னிச்சர் வியாபாரம் சரியாகப் போகாததால் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பேன்சி பொருள்கள் வியாபாரம் செய்யலாம் என்ற ஐடியாவில் இந்த விசிட்.
பம்பாய் சுற்றுதல் முடிந்து ஹோட்டல் அறையில் வந்து தங்கிய போது மறுநாள் காலை சூரத் பயணம் போகவேண்டும் என்ற நினைவோடு உறக்கத்தில் ஆழ்ந்து கனவுகளில் நுழைந்த்து மனது
( தொடரும்)

கருத்துகள் இல்லை: